வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி: வாலிபர் கைது

பிரபல நிறுவனம் ஒன்றிலும், திருவேற்காடு நகராட்சியிலும் வேலை வாங்கித் தருவதாக கூறி, 20 பேரிடம் நான்கு லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


வேலூர் ஆணையபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகன் மோகன் (எ) ராபர்ட் (26). இவர், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், வேலப்பன் சாவடியில் உள்ள டி.வி.எஸ்., நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட்டாக பணிபுரிந்து வந்தார். அப்போது, பிரபல, நிறுவனத்தில் துணை கான்ட் ராக்ட் எடுத்து பணிபுரியும் ஆனந்தனுடன் மோகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆனந்தனுக்கு கீழ் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஆரம்பத்தில் ஆனந்தனுக்கு சில கூலியாட்களை மோகன் அனுப்பி வந்தார். நாளடைவில் வேலைக்கு அனுப்பும் தொழிலாளர் களிடம், மோகன் பணம் வாங்கிக் கொண்டு வேலையில் சேர்த்துவிட்டார்.


இதையறிந்த, நிறுவனம், அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டது. இதனால், அவர் வேலையில்லாமல் சுற்றி திரிந்தார். மோகனின் மாமா முனுசாமி, ராணுவத்தில் பிளம்பராக பணிபுரிந்து வருகிறார். அவரிடம், 'டி.வி.எஸ்., நிறுவனம் மற்றும் திருவேற்காடு நகராட்சியில் வேலைக்கு பலர் தேவைப் படுகின்றனர். யாராவது தெரிந்தால் கூறுங்கள்' என்று மோகன் கூறினார். இது உண்மையென நம்பிய மோகனின் மாமா முனுசாமி, ஆவடியில் சமூக தொண்டு செய்து வரும் ஏகவள்ளியிடம் மோகனை அறிமுகப்படுத்தினார். 'திருவேற்காடு நகராட்சியில் துப்புரவு பணிகளுக்கு பெண்களும், டி.வி.எஸ்., நிறுவனத்திற்கு படித்த பட்டதாரிகளும் தேவைப் படுகின்றனர்,' என ஏகவள்ளியிடம் மோகன் ஆசை வார்த்தை கூறினார். இதில், மயங்கிய ஏகவள்ளி தனக்கு தெரிந்த ஆவடியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 20 பேரை மோகனிடம் அனுப்பினார். அவர்கள் ஒவ்வொருவரிடமும், ஐந்தாயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை மோகன் பெற்றுக் கொண் டார்.


பணம் கொடுத்ததற்கு அத்தாட்சியாக, டி.வி.எஸ்., நிறுவனம் மற்றும் திருவேற்காடு நகராட்சி பெயர் அச்சிட்ட உத்தரவாத சான்று களையும் கொடுத்துள்ளார். மேலும், புகைப்படத் துடன் கூடிய அடை யாள அட்டையையும் மோகன் கொடுத்து அசத்தியுள்ளார். இதனால், வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் நம் பிக்கையாக இருந்தனர். பல நாட்களாகியும், அந்நிறுவனத்திலிருந்து வேலைக்கான அழைப்பு எதுவும் வரவில்லை. இதில், சந்தேகமடைந்து மோகனிடம் விசாரித்தனர். 'ஐந்து அல்லது ஆறு பேரை கூட்டாக அழைத்து வாருங் கள். அப்போதுதான் அந் நிறுவனத்தில் வேலைக்கு எடுப்பார்கள்' என்று மோகன் வற்புறுத்தினார். ஆட்களை மொத்தமாக அழைத்து வர முடியாத நிலையில், பணம் கொடுத் தவர்கள் தவித்தனர். இதற் கிடையே, வீட்டிலிருந்து மோகன் மாயமாகிவிட்டார்.


இது குறித்து, ஆவடி சத்தியவாணிமுத்து நகரை சேர்ந்த லோகேஷ், சுப்பிரமணி உள்ளிட்ட பலர், புறநகர் கமிஷனர் ஜாங்கிட் டிடம் புகார் அளித்தனர். கமிஷனர் உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் தெய்வேந் திரன் தலைமையில் தனிப் படை அமைத்து, மோகனை தேடி வந்தனர். வேலப்பன்சாவடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண் டிருந்த மோகனை, தனிப் படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், வேலை வாங்கித் தருவதாக 20 பேரிடம் நான்கு லட்சம் ரூபாய் வரை மோகன் ஏமாற்றியதை ஒப்புக் கொண்டான். கைதான மோகனிடமிருந்து, பிரபல நிறுவனம் மற்றும் திருவேற்காடு நகராட்சியின் போலி ஆவணங் கள் பறிமுதல் செய்யப்பட்டன. மோகனை போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர். சிறப்பாக புலன்விசாரணை செய்து, குற்றவாளியை கைது செய்த போலீசாரை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் பாராட்டினார்.

0 comments: