அரவாணிகளுக்கு ரேஷன்கார்டு

'தமிழகத்தில் 991 அரவாணிகளுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது' என அமைச்சர் வேலு தெரிவித்தார். சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர்கள் அளித்த பதிலுரை: செங்குட்டுவன் - தி.மு.க.,: கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு புதிய ரேஷன்கார்டுகள் வழங்க அரசு ஆவன செய்யுமா?


அமைச்சர் வேலு: கணவனால் கைவிடப்பட்டவர்கள் தங்களது கணவர் வசிக்கும் முகவரியை தெரிவித்தால், அந்த ரேஷன்கார்டிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டு, தனி ரேஷன்கார்டு வழங்கப்படும். விவகாரத்து பெற்றவர்கள் கோர்ட் ஆணையை கொடுத்தால் அதன்படி, ரேஷன்கார்டு வழங்கப்படுகிறது.


ராஜேந்திரன் - தி.மு.க.,: தமிழகத்தில் எத்தனை அரவாணிகளுக்கு ரேஷன்கார்டு வழங்கப்பட்டுள்ளது?


வேலு: தமிழகத்தில் 991 அரவாணிகளுக்கு ரேஷன்கார்டு வழங்கப்பட்டுள்ளது. 15 பேருக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது. ஒன்பது பேருக்கு பரிசீலனையில் உள்ளது.

ராஜேந்திரன்: கலப்புத் திருமணம் செய்தவர்கள், காதல் திருமணம் செய்தவர்களுக்கு எந்த அடிப்படையில் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.

வேலு: கலப்புத் திருமணம், மதம் மாறி திருமணம் செய்தவர்கள், காதல் திருமணம் செய்தவர்களில் ஆண்கள் 21 வயதும், பெண்கள் 18 வயதும் நிறைவு செய்திருக்க வேண்டும். இவர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் கேட்டு, பெயர் நீக்கம் செய்ய முடியாது. எனவே, இவர்களுக்கு பெயர் நீக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.

0 comments: