சீர்காழியில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை : டி.ஆர்.ஓ. தகவல்

சீர்காழியில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டிஆர்ஓ., அண்ணாதுரை தெரிவித்தார்.
சீர்காழி டிஆர்ஓ., அண்ணாதுரை தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


மாதந்தோறும் 2வது சனிக்கிழமை உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் எரிவாயு முகவர்கள், எரிவாயு நிறுவனத்தினர் ஆகியோர் இணைந்து குறைகளை நிவர்த்தி செய்ய ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சீர்காழி பகுதியில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடின்றி வழங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் திருமுல்லைவாசல் காஸ் ஏஜன்சி கம்ப்யூட்டர் மென்பொருள் பழுதானதால் பதிவு செய்யப்பட்ட அனைத்து எண்களும் அழிந்து விட்டன. மீண்டும் மென்பொருள் சரி செய்யப்பட்டு பதிவு எண்களை கண்டறிந்து காஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் சீர்காழியில் காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் சட்டவிரோதமாக வீடுகளுக்கு உபயயோகப்படுத்தும் காஸ் சிலிண்டர்களை கடைகள் மற்றும் ஓட்டல்களில் பயன்படுத்தக்கூடாது. மீறி கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார். தாசில்தார் பாலச்சந்திரன், துணை தாசில்தார் பொன்பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

0 comments: