புரிந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்மாவட்டத்தில் 2ம் இடம் பிடித்த மாணவி பேட்டி

''பாடங்களை புரிந்து கொண்டு படித்தாலே அதிக மதிப்பெண்கள் பெறலாம்'' என்றுபிளஸ் 2 தேர்வில் சென்னை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிபத்மினி தெரிவித்தார்.வேப்பேரி, அகர்வால் வித்யாலயா மேல் நிலைப் பள்ளிமாணவி பத்மினி. பிளஸ் 2 தேர்வில் இவர் ஆயிரத்து 177 மதிப்பெண்கள் பெற்றுமாவட்ட அளவில் இரண்டாவது இடம் பிடித்தார்.இவர் தமிழ்-187, ஆங்கிலம்-192, வணிகவியல்-200, கணக்கு பதிவியல்- 200, கணிதம்- 200 மற்றும்பொருளாதாரத்தில்- 198 என மதிப் பெண்கள் பெற்றுள்ளார்.இது குறித்து பத்மினிகூறுகையில்,'டியூஷன் வைத்துக் கொள்ளாமல் சுயமாக படித்தாலே அதிகமதிப்பெண்கள் பெறலாம். தினமும் அதிகாலை 4 மணி முதல் படிப்பேன். தேர்வுநேரத் தில் நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் படிப்பேன்.பிளஸ் 2 வந்தவுடன் 'டிவி' பார்ப்பதை நிறுத்தி விட்டேன். எனது படிப்பிற்கு ஆசிரியர்களும், பெற்றோரும்பெரும் உதவி செய்தனர். எனது பெற்றோர் அதிகம் படிக்காதவர்கள். எனவே, நான்படிப்பில் சிறந்து விளங்கவேண்டும் என தனி அக்கறை எடுத்துக் கொண்டனர். பாடங் களை புரிந்து கொண்டு படித்தாலே அதிக மதிப் பெண்கள்பெறலாம்,'என்றார்.
மாணவி பத்மினியை பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி மற்றும் ஆசிரியர்கள்வாழ்த்தினர்.

0 comments: