கோயம்பேடு முதல் பரங்கிமலை வரை மெட்ரோ ரயில்: 3 ஆண்டுகளில் நிறைவேற்ற திட்டம்

''வரும் 2013ம் ஆண்டிற்குள் கோயம்பேடு முதல் பரங்கிமலை வரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நிறைவேறும்,'' என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.


வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறிவரும் சென்னை மாநகரின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பெருகிக் கொண்டே வருகிறது. எனவே, ரயில்பாதை போக்குவரத்து திட்டம் ஒன்றின் தேவையை உணர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அந்த வகையில், மெட்ரோ ரயில் திட்டத்தில் இரண்டு வழித் தடங்கள் அமைக்கப்படுகிறது. முதல் வழித்தடத்தில் வண்ணாரப் பேட்டையிலிருந்து, விமான நிலையம் வரை 23.1 கி.மீ., தூரத்திற்கும், இரண்டாம் வழித் தடத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 22 கி.மீ., தூரத் திற்கும் ரயில் பாதை அமைக்கப்படுகிறது.


முதல் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டையிலிருந்து சைதாப் பேட்டை வரை 14.3 கி.மீ., தூரம் சுரங்கப் பாதையாகவும், மீதமுள்ள பகுதி உயர்த்தப் பட்ட பாதையாகவும் இருக்கும். இரண்டாவது வழித்தடத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணாநகர் இரண்டாவது நிழற் சாலை வரை 9.7 கி.மீ., தூரம் சுரங்கப்பாதையாகவும், மீதமுள்ள பகுதி உயர்த்தப்பட்ட பகுதியாகவும் அமைக்கப்படவுள்ளன.


இந்த திட்டத்திற்கான அடிப் படை செலவுத்தொகை 14 ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப் பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான செலவில் 41 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் கூட்டாகப் பகிர்ந்து கொள்கிறது.
மீதி செலவுத் தொகை, ஜப்பானின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப் பிடம் இருந்து கடனாகப் பெறப்படும். ஜப்பானின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப்பு, இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்தது. அதற்கான ஒப்பந்தம் டோக்கியோ நகரில் கையெழுத்தானது.


சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கான பொது ஆலோசகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஈஜிஸ் ரயில் என்ற நிறுவனத்தின் தலைமையில் ஐந்து நிறுவனங் களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு கூட்டமைப்பு, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பொது ஆலோசர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில், உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.


கூட்டம் முடிந்த பின், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது: நடப்பு ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 2,000 கோடி ரூபாய் செலவிடப் படுகிறது. மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு வழித்தடங் களில் அமைக்கப்படுகிறது. இத் திட்டப் பணிகள் நடக்கும் போது வெளியூர்களிலிருந்து வரும் விரைவுப் பஸ்கள் சென்னை மாநகருக்குள் மாற்றுப்பாதை மூலமாக இயக்கப்படும். இப்பணிகளை முடித்துக் கொடுப்பதற்கு மூன்று ஒப்பந்தக் காரர்களிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது. இன்னொரு ஒப்பந்தக் காரரிடமும் பணிகள் கொடுக்கப் படவுள்ளது.


மெட்ரோ ரயில் செல்லும் தண்டவாளம் அகலமாகவும், குறுகியதாகவும் இருக்காது. இரண்டுக்கும் இடைப்பட்ட அகலத்தில் நிலையானதாக தண்டவாளம் அமைக்கப்படும். வரும் 2015ம் ஆண்டிற்குள் கோயம்பேடு முதல் பரங்கி மலை வரை முதல்கட்டப் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அதிநவீன தொழில்நுட்பத்துடன் பணிகள் விரைவாக நடக்கும் போது, வரும் 2013ம் ஆண்டிற் குள் இத்திட்டம் நிறைவுபெறும். தனியாரிடமிருந்து ஏழு எக்டேர் நிலப்பரப்பு ஆர்ஜிதம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆர் ஜிதம் செய்யப்படும் நில உரிமை யாளர்களுக்கு மார்க்கெட் மதிப் புடன் இழப்பீடு வழங்கப்படும். வாகனங்கள் பார்க்கிங் வசதியும் செய்து கொடுக்கப்படும். கோயம் பேட்டில் ரயில் பெட்டிகள் நிறுத்துவதற்கு பணிமனையும் அமைக்கப்படும். இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார். நிர்வாக இயக்குனர் சோமநாதன் உடனிருந்தார்.

0 comments: