குடும்பத்தகராறு: தஞ்சையில் தந்தை, மகன் தற்கொலை

தஞ்சையில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை, மகன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர்.இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:தஞ்சை மருத்துவக் கல்லூரி ரோடு அபிராமபுரம் தேவன் நகரைச் சேர்ந்தவர் சிவசங்கர்(45). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வேலை செய்தார். இவரது மனைவி மகேஷ்வரி (38). தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் செவிலியர் பயிற்சி ஆசிரியராக உள்ளார். இவர்களது மகன் கார்த்திகேயன் (14). தஞ்சை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 8ம் வகுப்பிற்கு செல்ல உள்ளார். சிவசங்கர் சரியாக வேலைக்கு செல்லாததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் மகேஷ்வரி கடந்த சில மாதங்களாக தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். மீண்டும் தின தினங்களுக்கு முன்பு மகேஷ்வரி அபிராமபுரத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்தார்.இந்நிலையில் நேற்று (13ம்தேதி) மகேஷ்வரி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பணிக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது கணவர் சிவசங்கர், மகன் கார்த்திகேயன் ஆகிய 2 பேரும் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.இது குறித்து மகேஷ்வரி தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

0 comments: