சென்னையில் திடீர் மழை

சென்னை நகரின் பல இடங்களில் நேற்று இடியுடன் கூடிய திடீர் மழை பெய்ததால், வாட்டி வதைத்த அனல் காற்று மாறி குளிர்ச்சியுடன் காணப்பட்டது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலினால், மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்.இந்நிலையில், பல்லாவரம், குரோம்பேட்டை, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு 9 மணியளவில் இடியுடன் கூடிய திடீர் மழை பெய்தது. இந்த மழையால், அனல் காற்று மாறி, குளிர்ச்சியுடன் காணப் பட்டது.

0 comments: