ஆந்திரா:34 இலங்கை தமிழர்களிடம் விசாரணை

ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது 6 படகுகள் அத்துமீறி வந்து கொண்டிருப்பதைக் கண்டனர்.
அந்தப் படகுகளை வழிமறித்து நிறுத்தினர். இலங்கையைச் சேர்ந்த அப்படகுகளில் மொத்தம் 34 இலங்கைத் தமிழர்கள் இருந்தனர். கடலோர காவல் படையினர், அவர்களை படகுகளுடன் சேர்த்து காக்கிநாடா துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு படகுகளை பறிமுதல் செய்த அவர்கள், இலங்கைத் தமிழர்களை கடலோர காவல் படை கப்பலிலேயே சிறை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிடிபட்ட தமிழர்கள், வழக்குப் பதிவு செய்து மேல்விசாரணை நடத்துவதற்காக, இன்னும் போலீசில் ஒப்படைக்கப்படவில்லை. துறைமுகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0 comments: