மகனை காப்பாற்ற போதை மருந்தை தின்று உயிர் விட்ட பெண்

பிரேசில் நாட்டில் உள்ள அலாகஸ் மாகாணத்தில் உள்ள மக்கியோ நகரை சேர்ந்தவர் ஜோசெலிடா டி மொரேஷ் (வயது 60). இவரது 16 வயது மகன், “கொகைன்” போதை மருந்து கடத்தல் தொழில் செய்து வந்தான்.
இதை அறிந்த போலீசார் அவனை தேடிவந்தனர். அவன் போதை மருந்துகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

அவனது தாயார் ஜோசெலிடாவிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே தனது வீட்டுக்கு போலீசார் வருவதை அறிந்த ஜோசெலிடா தனது மகன் பதுக்கி வைத்திருந்த கொகைன் போதை மருந்தை அழிக்க நினைத்தார்.
அதற்காக அவற்றை வாயில் போட்டு மென்று விழுங்கிவிட்டார். அளவுக்கு அதிகமாக மருந்தை தின்ற அவர் போலீசாரின் விசாரணையின்போதே மயங்கி விழுந்தார்.

உடனே, ஆம்புலன்சை வரவழைத்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தனது மகனை காப்பாற்றுவதற்காக தாய் தனது இன்னூயிரை மாய்த்துக் கொண்டார்.

0 comments: