
அரபிக்கடல் அருகே, சோமாலிய கடற்பகுதியில் இன்று குவைத் எண்ணெய் கப்பல் ஒன்று வந்துகொண்டிருந்தது.அப்போது, திடீரென படகில் வந்து அந்த கப்பலை விரட்டிய கொள்ளையர்கள், தானியங்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி, அந்த கப்பலைக் கடத்த முயன்றனர். இருப்பினும் அதிர்ஷடவசமாக அந்த கப்பல், கொள்ளையர்களின் கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கோலாலம்பூரிலிள்ள சர்வதேச கடற்கொள்ளை தடுப்புக் கழகத் தலைவர் நோயல் சூங் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment