அதிசய வாவல் மீன் சிக்கியது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து கடந்த 25ம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் ஆழ்கடலில் வலைகளை விரித்து மீன் பிடித்தனர். இவர்கள் விரித்த வலையில் அதிசய சடைவாவல் மீன் சிக்கியது.

இதன் உடல் முழுவதும் கறுப்பு, சிகப்பு கலரில் உள்ளது. மீனின் முக பகுதியில் சிறிய அளவில் 2 கொம்புகள் உள்ளன.இதுபற்றி மீனவர் சித்திரைவேல் கூறுகையில், இது அரிய வகையை சேர்ந்த மீன்.

ஆழ்கடலில் தான் வசிக்கும். இது மற்ற மீன்களை விட அதிவேகமாக நீந்திச்செல்லும் என்பதால், இதை பறக்கும் மீன் என்றும் சொல்வர். தற்போது வலையில் சிக்கிய மீன் ஒரு கிலோ எடை உள்ளது என்றார்.

0 comments: