மெ‌ரினா கட‌ற்கரை‌யி‌ல் ‌கிட‌ந்த 5 கிலோ க‌ஞ்சா

செ‌ன்னை மெ‌ரினா கட‌ற்கரை‌‌யி‌ல் கே‌‌ட்பார‌‌ற்று ‌கிட‌ந்த ஐ‌ந்து‌ ‌கிலோ க‌ஞ்சாவை காவ‌ல்துறை‌யின‌ர் ப‌றிமுத‌ல் செ‌ய்து ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

மெ‌ரினா க‌ாவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் முகமது நாச‌ர் தலைமை‌யி‌ல் காவல‌ர்க‌ள் இ‌ன்று காலை ரோ‌ந்து ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.அ‌ப்போது கா‌ந்‌தி ‌சிலை ‌பி‌ன்புற‌ம் கட‌ற்ரை மண‌லி‌ல் ஒரு பெ‌ரிய ‌பிளா‌ஸ்டி‌க் பொ‌ட்டல‌ம் ‌கிட‌ந்ததை காவ‌ல்துறை‌யின‌ர் க‌ண்டெடு‌த்து ‌பி‌ரி‌த்து‌ பா‌ர்‌த்து‌ள்ளன‌ர்.

அ‌தி‌ல் 5 கிலோ க‌ஞ்சா இரு‌ந்ததை தொட‌ர்‌ந்து அதனை அவ‌ர்க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்து வழ‌க்கு‌ப்ப‌தி‌ந்து ‌விசாரணை நட‌‌த்‌தி வரு‌‌கி‌ன்றன‌ர்.

0 comments: