திருவனந்தபுரம் அருகே 2 சிறுவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.திருவனந்தபுரம் மாவட்டம் அரியநாடு பகுதியை சேர்ந்தவர் மல்லிகா.
அங்குள்ள மார்க்கெட்டில் குடிசை போட்டு தனியாக வசித்து வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மல்லிகா குடிசையில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து அறிந்ததும் போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பரிசோதனையில் அவரை பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுக்கும் குறைவான 2 பேர் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த மல்லிகா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரை பலாத்காரம் செய்த 2 சிறுவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
http://www.adiraidailynews.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment