வீட்டு வசதி வாரிய நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு

கடந்த 2003ம் ஆண்டில், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் அருகே கீழநத்தம் பகுதியில் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

அங்கு ஓய்வு பெற்ற எஸ்.ஐ தங்கபெருமாள், அரசு டிரைவர் வடிவேல், வருவாய் ஆய்வாளர் முத்துசாமி உட்பட 8 பேர் வீடு கட்டி வசித்தனர். வீடுகளை காலி செய்யுமாறு வீட்டுவசதி வாரியம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றனர்.

பின்னர் அந்த தடை நீக்கப்பட்டது.இதையடுத்து, வீடுகளை இடிப்பதற்காக நேற்று முன்தினம் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் நடேசன் உள்ளிட்ட அதிகாரிகள், ஜேசிபி இயந்திரத்துடன் அங்கு சென்றனர். அவர்களை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், நேற்று காலையில், நடேசன், ஆர்.டி.ஓ. தமிழ்செல்வி உள்ளிட்டோர் போலீசாருடன் அங்கு வந்தனர்.

அப்போது, ஜேசிபி இயந்திரம் முன்பு மக்கள் படுத்து மறியல் செய்தனர்.போலீசார் எச்சரித்தும் அவர்கள் கலையாததால், தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டன.

அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்கொலை முயற்சிடிரைவர் வடிவேல் மனைவி விமலா, ஜேசிபி இயந்திரம் முன்பு படுத்து தனது வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அதிகாரிகள் வீட்டை இடிக்கமுயன்றனர். உடனே, வீட்டுக்குள் சென்ற விமலா, மின் விசிறியில் தூக்கு போட்டு கொள்ள முயன்றார்.

போலீசார், வீட்டு கதவை உடைத்து விமலாவை காப்பாற்றினர். மயங்கி விழுந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

0 comments: