ரயிலில் பிறந்த குழந்தைக்கு பெயர் லாலு !!!

பீகார் மாநிலம் வழியே செல்லும் லோகித் எக்ஸ்பிரசில் நிறைமாத கர்ப்பிணி பெண் காயத்ரி (20) பயணம் செய்தார்.

ரயில் தேசிரி நிலையம் அருகே காசிபூர் பசாபர் இடையே வரும் போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு அந்த பெண் லாலுபிரசாத் என பெயர் சூட்டுவேன் என கூறினார்.
ஏழைகள் மீதான அவரது அக்கறையான பேச்சு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.


காய்த்ரி லாலுபிரசாத் வெற்றிபெற்ற பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார். தனது கணவர் வேலைபார்க்கும் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் போது தான் இவருக்கு குழந்தை பிறந்தது.

0 comments: