லிபரான் கமிஷன் அறிக்கை ரகசியமாக வெளியானது பற்றி விசாரணை

பாபர் மசூதி இடிப்பு பற்றி விசாரணை நடத்திய லிபரான் கமிஷன் அறிக்கை முன்கூட்டியே ரகசியமாக வெளியானது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று, பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்.


அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் மன்மோகன்சிங், வாஷிங்டன் நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர், லிபரான் கமிஷன் அறிக்கை பாராளுமன்றத்தில் தகாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு வெளியானது வருந்தத்தக்கது. நான் டெல்லி திரும்பியதும், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மற்றும் மந்திரிகளுடன் கலந்து பேசி, தகுந்த விசாரணை நடத்தப்படும்'' என்று தெரிவித்தார்.


மும்பை தாக்குதல் ஓராண்டு நினைவு தினத்துக்கு முந்தைய தினமான நேற்று அது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த மன்மோகன்சிங், மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் வரை ஓயமாட்டோம் என்று உறுதியாக அறிவித்தார்.


மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த மன்மோகன்சிங், அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்கா வாக்குறுதி அளித்து இருப்பதால், இந்த ஒப்பந்த விவகாரத்தில் உள்ள சிறு பிரச்சினைகளுக்கு இரண்டு வாரத்தில் தீர்வு காணப்பட்டுவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியான சீனா-அமெரிக்கா கூட்டறிக்கை சர்ச்சை பற்றிய கேள்விக்கு மன்மோகன்சிங் பதில் அளித்தார். அப்போது அவர், இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் 3-வது நாட்டுக்கு பங்கு இல்லை என்பதை ஒபாமா தன்னிடம் ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டார்

0 comments: