கோவையில் தாவரவியல் பூங்கா

கோவையில் 2010 ஜூன் திங்கள் 23 27 தேதிகளில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நினைவாக கோவை மாநகரத்தின் மையப் பகுதியில் உலகத் தரம் வாய்ந்த ஒரு தாவரவியல் பூங்கா அமைப்பது என முதலமைச்சர் கருணாநிதி முடிவு செய்துள்ளார்.


இத்தாவரவியல் பூங்கா, இப்பகுதியில் வளரக்கூடிய தாவரங்கள், பூச்செடிகள், செடிகொடிகள் மற்றும் மரங்கள் போன்றவற்றைக் கொண்டு மிகப்பெரிய அளவிலும் உலகத் தரம் வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.


கோவையில் தற்போதுள்ள மத்திய சிறைச்சாலையைப் படிப்படியாக வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, இப்பகுதியில் இந்த தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

0 comments: