வெளிநாடு வசூல் பாதிக்கும்

துபாயில் மிகப் பெரிய துபாய் வேர்ல்டு குழுமம் நிதி நெருக்கடியில் சிக்கியதால், இந்தி பட வசூல் பாதிக்கப்படும் என பாலிவுட் திரையுலகம் கலக்கம் அடைந்துள்ளது.

இந்தி திரைப்படங்களுக்கு உள்நாட்டுக்குப் பிறகு பாகிஸ்தான், வளைகுடா நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து அடுத்த இடம் வகிக்கின்றன. பாலிவுட் படங்களின் மொத்த வெளிநாட்டு வசூலில் வளைகுடா நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து மட்டும் 70 சதவீத பங்கு வகிக்கிறது. மொத்த வசூலில் வளைகுடா நாடுகள் மட்டும் 40 முதல் 45 சதவீத இடம் வகிக்கிறது.

ஷாரூக்கான், அமீர் கான், அமிதாபச்சன், அக்ஷய் குமார் ஆகிய டாப் ஹீரோக்கள் நடித்த படங்கள், வளைகுடா நாடுகளில் ரூ.35 கோடி முதல் ரூ.40 கோடி வசூலைக் குவிப்பது வழக்கம். எனவே, வளைகுடா நாடுகளில் படத்தை ரிலீஸ் செய்வது பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு மிக முக்கியமாக உள்ளது. துபாயில் மட்டும் புதிய படங்கள் 40 முதல் 50 திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றன.

இப்போது நிதி நெருக்கடியால் பா, தே டனா டன், ரேடியோ, ராக்கெட் சிங் உட்பட ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களின் வெளியீடு தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.

0 comments: