பயத்தில் மீனவர்கள்

இலங்கை கடற்படை ராமேஸ்வரம், மண்டபம் விசைப்படகு மீனவர்களை தாக்குவது தொடர்ந்து நடக்கிறது. மத்திய,மாநில அரசுகள் கண்டு கொள்ளாத நிலையில், மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மீனவர்கள் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது.

விசைப்படகில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், இரவில் மீன் பிடிக்கும்போது வெளிச்சத்திற்காக போகஸ் லைட், தீப்பந்தங் களை உபயோகிப்பர்.ஆனால், மண்டபம் மீனவர்கள் தற்போது இலங்கை கடற்படைக்கு பயந்து, நடுக்கடலில் இரவில் விசைப்படகில் எவ்வித வெளிச்சமும் இன்றி, இருளில் மீன் பிடி தொழில் செய்கின்றனர்.

0 comments: