
விமானத்தில் செல்லும் பயணிகளும் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 2 மணி நேர சோதனைக்கு பின் வெடிகுண்டு எதுவும் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது. போனில் பேசிய அந்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பை நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். இன்று அதெ நாள் என்பதால் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment