கடித்த குதிரை அடித்துக் கொலை

ஈரோடு மாவட்டம், கோபி பஸ் நிலையத்தில் நேற்று காலை 11 மணியளவில் வெறிபிடித்த நிலையில் திரிந்த பெண் குதிரை, திடீரென மக்களை விரட்டி கடித்தது. பலர் காயமடைந்தனர். மக்கள் அலறி ஓடினர்.

அங்கும் இங்கும் ஓடிய குதிரை அப்பகுதியில் இருந்த பூக்கடைகளை சேதப்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த கடைக்காரர்களும், அப்பகுதியில் இருந்தவர்களும் தடி, கற்களால் குதிரையை விரட்டினர்.

பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறிய குதிரை, சாலையில் நடந்து சென்றவர்களையும், பைக்கில் சென்றவர்களையும் விரட்டி கடித்தது. இதில் சுமார் 50 பேர் வரை காயமடைந்தனர். அப்போது சில ஆட்டோ டிரைவர்கள் நீண்ட கயிறுகளை எடுத்து வந்து குதிரையின் கழுத்து, கால்களில் கயிற்றை வீசி குதிரையை கீழே சாய்த்தனர். பின்னர், எல்லோரும் தடிகளால் சரமாரியாக குதிரையை அடித்தனர். இதில் குதிரை இறந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடியிருப்பு பகுதிகளில் விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்யும் போது, வனத்துறைக்கு தகவல் கொடுப்பதே வழக்கம்.
புளூகிராஸ் அமைப்புகளுக்கு தொடர்பு கொண்டால் கூட, அவர்களே போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்து வரவழைப்பார்கள். அப்படி செய்யாமல், மக்களே குதிரையை அடித்து கொன்றதை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

0 comments: