காங்கிரசில் இணைகிறார் பால்தாக்ரே மருமகள் !

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேவின் மருமகள் ஸ்மிதா தாக்கரே விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என மராட்டிய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஹுசைன் தல்வாய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிடிஐ நிறுவனத்திற்கு ஹுசைன் தல்வாய் அளித்துள்ள பேட்டியில், “காங்கிரஸ் கட்சியில் ஸ்மிதா எப்போது இணைவார் என்று என்னால் உறுதியாகக் கூற முடியாது. எனினும் காங்கிரஸில் இணைவதில் ஸ்மிதா உறுதியாக உள்ளார். காங்கிரஸ் கட்சியில் ஸ்மிதா இணைவதன் மூலம் சிவசேனாவில் பால் தாக்கரேவுக்கு பிறகு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர் யாருமில்லை என்பது தெரிய வருகிறது” என்று கூறியுள்ளார்.

தற்போது 48 வயதாகும் ஸ்மிதா, மராட்டிய மக்களுக்கு சிவசேனா சரியான சேவையாற்றவில்லை எனக் கருதுவதாகவும், குறுகிய மனப்பான்மை கொண்ட சிவசேனாவின் கொள்கையில் அவருக்கு நம்பிக்கையில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments: