பயணம் திருப்தியளிக்கிறது''''''

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் தான் நடத்திய சந்திப்பும், தனது அமெரிக்கப் பயணமும் திருப்தியளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட இருந்த நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை மேம்படுத்திக்கொள்ள இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து பலவற்றை சாதிக்க முடியும் என்ற திருப்தியுடன் நான் நாடு திரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

“எனது பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வை அதிகரித்துள்ளது மட்டுமின்றி, இரு நாடுகளின் தேச நலன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இராஜதந்திரக் கூட்டாண்மையை வலுப்படுத்த உதவும் என்ற நிறைவும் உள்ளது” என்று கூறிய மன்மோகன் சிங், “21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள இந்தியாவும் அமெரிக்காவும் முக்கிய பங்களிப்பைச் செய்திட முடியும் என்பதை அதிபர் ஒபாமா அங்கீகரித்துள்ளார். உலக அமைதிக்காவும், நிலைத்தன்மையை காப்பாற்றவும், ஒத்தக் கருத்து,ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் வரலாற்று முக்கயத்துவம் வாய்ந்த வாய்ப்புள்ளதையும் உணர்ந்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க தொழில் முனைவர்களுடன் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், அவர்கள் தங்களுடைய தொழிலை இந்தியாவிற்கும் விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டியதாகக் கூறியுள்ளார்.

0 comments: