காமராஜர் பல்கலையில் மலேசிய இலக்கியத் தமிழாய்வு மையம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இந்தாண்டுக்குள் மலேசிய இலக்கியத் தமிழ் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் இரா. கற்பககுமாரவேல் தெரிவித்தார்.


காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த மலேசிய தமிழாசிரியர்களுக்கான பயிலரங்கு துவக்க விழாவில் துணைவேந்தர் கற்பககுமாரவேல் பேசுகையில்,


'தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள தமிழ் இலக்கியங்களை முழுவதும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத நிலை உள்ளது. குறிப்பாக, மலேசியத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி நம் தமிழர்களும், மாணவர்களும் அறிந்துகொள்ள வேண்டும்.


எனவே இதற்காக மலேசிய இலக்கியத் தமிழ் ஆய்வு மையம் ஒன்றை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிலேயே, ஆய்வுமையம் நிறுவப்படும் வாய்ப்புள்ளது' என்றார்.


விழாவில், குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன், மலேசியத் தமிழாசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 comments: