அதிக பெண்களுக்கு வேலை பெரிய நிறுவனங்கள் தயார்

சமூகத்தில் ஆண்&பெண் வேறுபாட்டை நீக்கும் முயற்சியாக, அதிக எண்ணிக்கையில் பெண்களை வேலைக்கு சேர்க்க பெரிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

குடும்ப சூழ்நிலை, உடல்நிலை பாதிப்புகள் காரணமாக பெண் ஊழியர்கள் அடிக்கடி விடுப்பு எடுக்கலாம் என்று கருதி பெண்களை வேலைக்கு சேர்க்க பெரிய நிறுவனங்கள் முன்பு தயக்கம் காட்டி வந்தன. அந்த நிலை இப்போது மாறி விட்டது. சமுதாயத்தில் ஆண்&பெண் பாகுபாட்டை நீக்கவும், அந்தஸ்தில் ஆணுக்கு நிகராக பெண்ணை உயர்த்தவும் தனியார் நிறுவனங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சிஎஸ்சி, வேலைக்கு பெண்ணை சிபாரிசு செய்யும் ஆண் ஊழியருக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது. பெண்களை தேர்வு செய்ய கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தவும் அது திட்டமிட்டுள்ளது.பெப்சி நிறுவன பெண் தலைமை அதிகாரியுமான இந்திரா நூயி கூறுகையில் ஒரு பெண், வேலைக்கு சேர்ந்த பிறகு சந்திக்கும் வருத்தங்கள், வேதனைகளுக்கு குறைவில்லை. அவர்களது துன்பங்களை அறிவேன். அதனால், எங்கள் நிறுவனத்தில் சிறந்த பணி சூழ்நிலையை உறுதி செய்துள்ளேன் என்றார்.

உற்பத்தி, கட்டமைப்புத் துறைகளில் காலம் காலமாக பெண் ஊழியர்கள் குறைந்த அளவே வேலை பெற்று வந்தனர். அந்த நிலை இப்போது மாறியுள்ளது. சில்லறை வர்த்தகம், உற்பத்தி நிறுவனங்களும் அதிகளவில் பெண்களை வேலைக்கு தேர்வு செய்கின்றன.

ரெனால்ட் &நிசான் கார் நிறுவன தலைமை அதிகாரி கார்லஸ் கோன் கூறுகையில், கார் டிசைன், கலர் தேர்வு செய்வதில் அதிக பெண் ஊழியர்களை பயன்படுத்துகிறோம். அவர்களின் திறமை ஆச்சரியம் அளிக்கிறது என்றார்.

0 comments: