நர​சிம்​ம​ராவை ஏன் சேர்க்கவில்லை?-சிபிஐ

பாபர் மசூதி இடிப்பு தொடர்​பாக லிப​ரான் கமி​ஷன் வெளி​ட்டுள்ள அறிக்​கை​யில் முன்​னாள் பிர​த​மர் நர​சிம்மராவை​யும் சேர்க்க வேண்​டும் என்று இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யின் பொதுச் செய​லாளர் ஏ.பி.பர​தன் கூறியுள்ளார்.


அவர் கூறுகையில்,


லிப​ரான் அறிக்​கை​யில் அப்​போது மத்​தி​யில் ஆட்​சி​யில் இருந்த நர​சிம்​ம​ராவ் அர​சை​யும் இணைத்​தி​ருக்க வேண்​டும். அவ்​வாறு சேர்க்​கா​தது அறிக்​கை​யில் பெரிய இடை​வெ​ளியை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளது. அந்த தவறை சரி​செய்ய வேண்​டும்.​


மசூதி இடிக்கப்படும் வரை ராவ் அமைதியாக இருந்தார். இதனால் குற்​றம் சுமத்​தப்​பட்​டுள்​ள​வர்​க​ளின் பட்​டிய​லில் அவ​ரது பெய​ரை​யும் சேர்க்க வேண்​டும்.


அதே நேரத்தில்​ பாபர் மசூதி இடிப்​பில் வாஜ்​பாய் குற்​ற​மற்​ற​வர் என்பது எனது தனிப்​பட்ட கருத்​து என்றார்.

0 comments: