அமைச்சர் கோ.சி. மணி மகன் காலமானார்

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணியின் மூத்த மகன் மதியழகன் இன்று காலமானார்.
51 வயதான மதியழகன், உடல் நலம் சரியில்லாமல் நீண்ட நாட்களாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை மதியழகன் காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக உள்ள மதியழகனுக்கு, கஸ்தூரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இறுதிச் சடங்குகள் சொந்த ஊரில் நாளை நடைபெறுகிறது.

0 comments: