பாகிஸ்தான் கேப்டன் பதவியில் முகமது யூசுப் நீடிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனாக யூனுஷ்கான் இருந்து வந்தார். 2011 உலக கோப்பை போட்டி வரை அவரே கேப்டனாக நீடிப்பார் என்று அறிவிக் கப்பட்டு இருந்தது.
ஆனால் அவர் மீது வந்த சில புகார்களை அடுத்து அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு முகமது யூசுப் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி கேப்டனாக யூசுப் இருந்து வருகிறார். அடுத்து பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியுடன் மோத உள்ளது.
இந்த அணிக்கும் முகமது யூசுப்பே கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. யூனுஸ்கான் அணியிலும் இடம் பெறவில்லை. அவர் உடல் தகுதி பெறாததால் தான் அணியில் இடம் பெற வில்லை என்று அறிவித்து உள்ளனர்.

0 comments: