Showing posts with label சிக்கல். Show all posts
Showing posts with label சிக்கல். Show all posts

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் சிக்கல்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் சட்ட ரீதியாக சாத்தியக்கூறு குறைவாக உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் செலவுக் கணக்குத் தொடர்பாக நாடு முழுவதும் 16 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதிக்குள் அந்தக் கட்சிகள் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய கெடு விதிக்கப்பட்டுள்ளது.


வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் உள்ள குறைபாடுகளை களைவது தொடர்பாக மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.


வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு சட்டத்தில் சில மாற்றங்கள் தேவை. தற்போதைய நடைமுறையில் சில பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் பல்வேறு நாடுகளில் வசிப்பதால் இந்த சிக்கல் உள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடந்த ôதம் கடிதம் அனுப்பியுள்ளோம்.