Showing posts with label நோய். Show all posts
Showing posts with label நோய். Show all posts

தஞ்சை பகுதியில் பரவும் சிக்குன் குன்யா .

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சமிப காலமாக பரவும் சிக்குன் குன்யா நோயால் அதிரையில் ஏராளமானோர் பாதிகாப்பட்டுள்ளனர் இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகின்றனர் தினந்தோறும் மக்கள் கூட்டம் மருத்துவமனையில் அலைமோதுகின்றன இதை பார்க்கும் போதுஅதிரையில் சமிபத்தில்பெய்த மழை வெள்ளத்தால் இந்நோய் தாகஈருக்க கூடும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே போன்று கடந்த இரண்டுஆண்டுகளுக்கு முன்பு இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மரணத்தில் முடிந்த சோகமும் உண்டு .எனவே இது சம்பந்தமான அரசுஅதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம் செய்யுமா சுகாதார துறை ?

பு‌ற்றுநோயா‌ல் பா‌தி‌‌க்க‌ப்ப‌ட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயராம‌ன் கவலை‌க்‌கிட‌ம்

புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் வந்தவாசி தொகுதி தி.மு.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஜெயராமன் கவலைக்கிடமாக உள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி.ஜெயராமன். அவருக்கு வயது 60. தி.மு.க.வை சேர்ந்த இவர் சுமார் 8 மாதங்களாக இரைப்பையில் புற்றுநோய் ஏற்பட்டு, சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த வாரம் அவரது உடல் நிலை மோசமானதால் சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மரு‌த்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மரு‌த்துவ‌ர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு ஜெயராமன் எம்.எல்.ஏ. உடல் நிலை மோசம் அடைந்தது. அவருக்கு மரு‌த்துவ‌ர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாததால், அவருடைய மகன் கமலக்கண்ணன், எஸ்.பி.ஜெயராமனை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர முடிவு செய்தார்.அதன்படி செய்யாறு தாலுகா அனக்காவூர் ஒன்றியம் செங்காடு கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்‌றிரவு ஜெயராமன் எம்.எல்.ஏ.வை கொண்டு வந்தனர்.