Showing posts with label மதுரை கிருத்திகா. Show all posts
Showing posts with label மதுரை கிருத்திகா. Show all posts

மிஸ் இந்தியா போட்டியில் மதுரை கிருத்திகா

மிஸ் இந்தியா போட்டியில் மதுரையில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த 20 வயது இளம் புயல் கிருத்திகா பாபு பங்கேற்றுள்ளார்.
பேன்டலூன் மிஸ் இந்தியாப் போட்டியில் 18 அழகிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் கிருத்திகா பாபுவும் ஒருவர். 20 வயதான இவர் பெங்களூர் மெளன்ட் கார்மல் கல்லூரி மாணவியாவார். பெங்களூரில் வளர்ந்தாலும் இவர் பிறந்தது மதுரையில்.

ஐந்து அடி 10 அங்குலம் உயரம் கொண்ட கிருத்திகா, நடனம், யோகா, தடகளம் என ஆர்வம் கொண்டவர். டேவிட் பெக்காம் என்றால் கிருத்திகாவுக்கு உயிர்.

திகில் படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்ட இவருக்கு, ரொம்ன்டிக் காமெடிப் படங்கள் என்றால் ரொம்பப் பிடிக்குமாம்.

திரில்லிங்கான வாழ்க்கையை விரும்பும் கிருத்திகா மிஸ் இந்தியா பட்டம் வெல்வது உறுதி என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.

செக்ஸ் குறித்த கிருத்திகாவின் கருத்து குறிப்பிடத்தக்கது – உலகின் சிறந்த உடற்பயிற்சிதான் செக்ஸ். உயிரினங்களின் அருமையான கலை வடிவம்தான் செக்ஸ் என்பது கிருத்திகாவின் எண்ணம்.

முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த ராணி என்பவர் மிஸ் இந்தியா பட்டம் வென்று தென் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தார். இப்போது மதுரையைச் சேர்ந்த கிருத்திகா பாபு மிஸ் இந்தியா போட்டியில் மோதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.