பெரும் கடனில் சிக்கித் தத்தளிக்கிறது துபாய். இதன் விளைவு, உலகம் முழுக்க எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.
சர்வதேச பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
துபாய் அரசுக்குச் சொந்தமான துபாய் வேர்ல்டு கார்ப்பரேஷனின் கடன் அளவு 80 பில்லியன் டாலர்களைத் தாண்டி நிற்கிறது. இந்தத் தொகை மற்றும் வட்டியை அந்த நாட்டால் உடனடியாகக் கட்ட முடியவில்லை. அடுத்த மே மாதம் வரை அவகாசம் வேண்டும் என சர்வதேச நாடுகளிடம் கேட்டுள்ளது துபாய்.
இந்தச் செய்தி பரவியதும் உலகப் பங்குச்சந்தைகள் ஆட்டம் காணத் துவங்கியுள்ளன. காரணம், சர்வதேச அளவில், அதுவும் செல்வம் கொழிக்கும் நாடு என வர்ணிக்கப்படும் துபாய்க்கு 80 பில்லியன் டாலர் என்பது சுமாரான தொகைதான்.
இந்தத் தொகை மற்றும் அதற்கான வட்டியைக்கூட கட்ட முடியாத மோசமான நிலையில் துபாய் அரசு இருக்கிறதா? என்ற கேள்வியின் விளைவு, துபாய்க்கு கடன் தந்துள்ளவர்களை துணுக்குற வைத்துவிட்டது.
இதனால் பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்கத் துவங்க, தடதடவென ஆரம்பித்துவிட்டது சரிவு.
சர்வதேச நாணயங்களின் மதிப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது இந்த துபாய் சரிவு.
Showing posts with label கடன். Show all posts
Showing posts with label கடன். Show all posts
கடனை திருப்பிச் செலுத்துவதில் தமிழகம் முதலிடம
வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது,'' என துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னையில் நடந்த மகளிர் சுயஉதவிக் குழுக் களுக்கு கடன் உதவி வழங்கும் விழாவில், சுய உதவிக் குழுக்களுக்கும், கூட்டமைப்புகளுக்கும் 78 கோடி ரூபாய் நிதி வழங்கி, துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் மொத்தம் நான்கு லட்சத்து 12 ஆயிரத்து 104 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இதில் 65 லட்சத்து 72 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். 2009-2010ம் நிதியாண்டில் மட்டும் 21 ஆயிரத்து 175 புதிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 2008-2009ம் ஆண்டில், தேசிய அளவில் அனைத்து வங்கிகளிடமும் இருந்து, மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கு 11 ஆயிரத்து 132 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வழங்கப்பட்டதில் 93 சதவீதம் மகளிரும், ஏழு சதவீதம் ஆண்களும் கடனை முழுமையாக திருப்பி செலுத்தியுள்ளனர். வங்கிகளிடம் வாங்கிய கடனை வட்டியோடு முழுமையாக திருப்பி செலுத்துவதில், தமிழகம் சிறந்து விளங்குகிறது. இது தமிழகத்திற்கே கிடைத்த பெருமை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Labels:
கடன்
Subscribe to:
Posts (Atom)