Showing posts with label செக்ஸ் சாமியார். Show all posts
Showing posts with label செக்ஸ் சாமியார். Show all posts

பணம் குவிந்தது எப்படி?

காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பல பெண்களுடன் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான தேவநாதன் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

தேவநாதனை சிவகாஞ்சி போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. டாக்டர் மனைவி, ஆசிரியர் மனைவி, நர்சு, டி.வி. நடிகை, விபச்சார அழகிகளுடன் கருவறையிலும், பல லாட்ஜூகளிலும் அர்ச்சகர் தேவநாதன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட தகவல்கள் வெளியாகின. இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். பல பெண்கள் குடும்பத்துடன் தலைமறைவு ஆகினர். தேவநாதனுடன் செக்சில் ஈடுபட்ட ஒரு பெண், அர்ச்சகர் தேவநாதன் வசிய மருந்து கொடுத்து கோவிலின் கருவறையில் கற்பழித்து விட்டதாக சிவகாஞ்சி போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்தார்.

இதையடுத்து அர்ச்சகர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிவகாஞ்சி போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு காஞ்சீபுரம் குற்றவியல் காவல் துறைக்கு மாற்றப்பட்டது. காஞ்சீபுரம் செல்போன் கடை ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்ல் அழிக்கப்பட்ட தேவநாதனின் செக்ஸ் ஆதாரங்கள் சென்னையில் ஒரு தொழில்நுட்ப கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சாதாரண கோவில் அர்ச்சகருக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைத்தது எப்படி? பழயசீவரத்தில் பங்களா, ஆடம்பர வீடு கட்டியது எப்படி? அர்ச்சகர் தேவநாதனின் பின்னால் இருந்து செயல்பட்டது யார்? என்று போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.