முஸ்லிம் லீக் கட்சி விழா

தந்தை பெரியாரின் அன்புக்கும், பேரறிஞர் அண்ணாவின் பாசத்திற்கும், எனது மட்டற்ற மதிப்புக்கும் உரிய பெருந்தகையாளர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் சுதந்திர இந்தியாவில் 1948 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 10 ஆம் நாள் தொடங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் நிறுவன நாள் விழா, 10.3.2010 அன்று நெல்லை மாநகரில் நிகழ்வ தறிந்து மகிழ்கிறேன்.

இந்திய அரசியல் நிர்ணய சபை இந்தியாவின் பொது மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்றபோது, அந்த அவையின் உறுப்பினராக இருந்த காயிதே மில்லத் அதனைக் கடுமையாக எதிர்த்ததுடன், இந்தி கூடாது என்றால் இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை ஏற்பது என்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் கேட்டபோது, வளம் செறிந்ததும், தொன்மை நிறைந்ததுமான என தருமைத்தாய் மொழி யாம் தமிழ் மொழியையே ஆட்சி மொழியாக்கலாம்டு என ஆணித்தரமாக முழங்கினார்.

தமிழ் மத்திய ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வரும் தமிழக அரசின் சார்பில், ஞுஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுடு நடைபெறவிருக்கும் வேளையில் நினைவுகூர்ந்து அன்னாரைப் போற்றுவது டன் அவர் நிறுவிய முஸ்லிம் லீக் இயக்கத்தின் நிறுவன நாள் விழா எழுச்சியுடன் நிகழ எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித் தாக்குகிறேன் என்று முதல்வர் கருணாநிதி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

0 comments: