எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொடும் முயற்சியில் தமிழர்

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொடும் முயற்சியில் ஒரு தமிழர் இறங்கவுள்ளார்.

அவரது பெயர் சந்தோஷ் குமார். வயது 27. இவரது தந்தை ரியாத்தில் வேலை பார்த்து வந்தார். பின்னர் துபாய்க்கு இடம் மாறினார். இந்த மாதத்தில் தனது எவரெஸ்ட் சாதனைப் பயணத்தைத் தொடங்குகிறார் சந்தோஷ் குமார்.

65 நாட்களில் சிகரத்தின் உச்சியை அடைய திட்டமிட்டுள்ளார். சிறார்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிராக இந்த பயணத்தை அர்ப்பணிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் சிறார் பாலியல் கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவ நிதி சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் முயற்சிக்கு 60 ஆயிரம் டாலர் வரை செலவாகும் என்று கூறுகிறார் சந்தோஷ் குமார். இதற்காக நிதியுதவியையும் அவர் எதிர்பார்த்துள்ளார்.

இதுதொடர்பான விவரங்களை அறிய கீழ்க்கண்ட இணையதளங்களை நாடலாம்..

0 comments: