17 வயது சிறுமியை மணந்த 112 வயது தாத்தா

சோமாலியாவைச் சேர்ந்த 112 வயது நபர், 17 வயதே ஆன சிறுமியை கல்யாணம் செய்த கொடுமை நடந்துள்ளது. இந்த அக்கிரமக் கல்யாணத்துக்கு நூற்றுக்கணக்கானோர் வந்து வாழ்த்தி ஆசிர்வாதம் செய்து விட்டுப் போயுள்ளனர்.

அந்த கொடூரத் தாத்தாவின் பெயர் அகமது முகம்மது டோரே. இவருக்கு 112 வயதாகிறதாம். ஏற்கனவே ஐந்து கல்யாணம் செய்தவரான இவருக்கு 18 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 17 வயதேயான சபீயா அப்துல்லா என்ற சிறுமியை தற்போது மணந்துள்ளார்.

இதுகுறித்து டோரே கூறுகையில், எனது கனவை இன்று கடவுள் நனவாக்கி விட்டார். சபியாவை பிறந்தது முதலே எனக்குத் தெரியும். அவரைக் கல்யாணம் செய்ய வேண்டும் என விரும்பினேன். வயதுக்கு வரும் வரை காத்திருந்து இப்போது கல்யாணம் செய்துள்ளேன் என்கிறார் பெருமையுடன்.

புதுக் கணவருடன் சபியா சந்தோஷமாக இருப்பதாக அவரது பெற்றோர் பெருமையுடன் கூறுகின்றனர்.

தாத்தா தொடர்ந்து கூறுகையில், நான் சபியாவை வற்புறுத்தவில்லை. எனது அனுபவத்தை பயன்படுத்தி, அவர் மீதான எனது காதலை பக்குவமாக தெரியப்படுத்தி சம்மதிக்க வைத்தேன் என்றும் பூரிப்போடு கூறுகிறார்.

இந்தக் கல்யாணக் கூத்து நடந்த பகுதியின் பெயர் குரிசீல். இப்பகுதியில் இதுவரை இப்படி ஒரு கல்யாணமே நடந்ததில்லை என்று அப்பகுதியினர் கூறுகின்றனர்.

0 comments: