தேசிய கராத்தே போட்டிக்கு செல்ல வழியின்றி தவிக்கும் சிறுவன்


மதுரை மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் நரேஷ்(11). ஆறாவது படித்து வருகிறார். கராத்தே, யோகாவில் ஆர்வமுள்ளவர். பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்றுள்ளார். கராத்தே போட்டியில் "கிரீன் பெல்ட்' பெற்றுள்ளார். 11 வயதுக்குட்பட்டோர் போட்டியில் பங்கேற்ற இவர் இருமுறை மாவட்ட விருதும், மூன்று முறை மாநில அளவிலும், இருமுறை தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.

அடுத்து மும்பையில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளார். இதற்காக ஜூலையில் செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில் பங்கேற்று தேர்வு பெற்றுள்ளார். மும்பையில் "இஷிகாவா கப்' என்ற இப்போட்டி அக். 30 முதல் நவ. 2 வரை நடக்க உள்ளது. ஆனால் நரேஷ் மும்பை செல்ல தேவையான பணமில்லாததால் வேதனையில் தவிக்கிறார். அவரது தந்தை ஜெராக்ஸ் பிரதிகள் எடுக்கும் பணி செய்து வருகிறார். "தேசிய விருதுகளை பெற்றும் மேலும் தேசிய போட்டியில் பங்கேற்க இயலாமல் போய்விடுமோ என வருத்தமாக உள்ளது' என்றார். இவரை 98420 58467 ல் தொடர்பு கொள்ளலாம்.

0 comments: