குற்றால அருவிகளில் கொட்டுது தண்ணீர்


மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, குற்றால அருவிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றால மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுந்தது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் அதிகளவு தண்ணீர் கொட்டியது. அதனால், இரு அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, போலீசார் தடை விதித்தனர். மழை குறைந்ததால் நேற்று காலை முதல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வழக்கம்போல் தண்ணீர் விழுந்தது. அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

0 comments: