கடலோர மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி

விளாத்திகுளம் வேம்பர் கடற்கரை கிராமங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிக்கும் பணியும், கிராமங்களில் வழக்கமாக வசிப்பவர்களுக்கான அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணியும் இன்று துவங்கியது.

இந்திய அரசு தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிக்க தீர்மானித்தது. நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி நபரை பற்றிய குறிப்பிட்ட புள்ளி விபரங்களுடன் 15 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய நபர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவை உள்ளடக்கியதாக உள்ளது. இதற்கான புள்ளி விவர சேமிப்பு 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்க்கப்பட உள்ளது.

இருப்பினும் கடற்கரை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடற்கரையை ஓட்டி உள்ள 9 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள கடற்கரை கிராமங்களுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி. அங்கு குடியிருப்பவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி இந்த ஆண்டிலேயே துவக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலூகா வேம்பார் பெரியசாமிபுரம், கீழ வைப்பார் சிப்பிகுளம், ஆகியவை உள்ளிட்ட கிராமங்களில் 33 கணக்கெடுப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வேம்பாரில் இன்று முதலாவதாக 10 கணக்கெடுப்பு மையங்களில் இருந்து பணியாளர்கள் வீடு வீடாக சென்று கடலோர கிராம மக்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை கேட்டு பதிவு செய்தனர்.

0 comments: