சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸுக்கு சீல்!!

பிரபல ஜவுளி மற்றும் பல்பொருள் விற்பனை நிறுவனமான சரவணா செல்வரத்தினம் கடைக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (எம்எம்டிஏ) அதிகாரிகள் இன்று திடீரென்று சீல் வைத்தனர்.

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ளது சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ். மிக பிரமாண்டமான இந்த கடையில் ஜவுளிகள், பொம்மைகள், காலணிகள் உள்ளிட்ட பலவகை பொருட்களும் விற்பனைக்கு உள்ளன.

இந்தக் கடை அமைந்துள்ள கட்டடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் அதை சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று முற்பகல், அந்தக் கடையை பூட்டி சீல் வைத்தனர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள்.

இந்தச் சம்பவம் தி.நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.நகரில் கட்டப்பட்டுள்ள பல பிரமாண்ட கட்டடங்களிலும் இதுபோன்ற விதிமீறல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோலத்தான் தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள பல பிரமாண்ட கட்டடங்களும் விதி மீறலில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டுள்ளன.

0 comments: