இவர்களும் குழந்தை தொழிலாளர்களா?

சென்னையில் குழந்தைகளை வைத்து பெற்றோர்களே பிச்சை எடுக்கும் தொழிலை செய்கிறார்கள். தினமும் ரூ.1,000 வருமானம் வருவதாக பெண் போலீசாரிடம் பிடிபட்ட 2 குழந்தைகள் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

பிச்சை எடுப்பவர்களை வேட்டையாடி பிடித்து, அதற்கான இல்லங்களில் ஒப்படைக்க வேண்டுமென்று அரசு கடுமையாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்காக பூந்தமல்லியில் அரசு தனி விடுதியே நடத்தி வருகிறது. போலீசார் பிச்சை எடுப்பவர்களை வேட்டையாடி பிடித்து அரசின் மறுவாழ்வு விடுதிக்கு அனுப்பிவைக்கிறார்கள்.

பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்டு புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கிறார்கள்.

பிச்சை எடுப்பவர்களை வேட்டையாடி தனி படை இயங்கி வருகிறது.
நேற்று காலையில் இன்ஸ்பெக்டர் இன்பகுமார் தலைமையில் பெண் போலீசார் வேடியம்மாள், வரலட்சுமி ஆகியோர் சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் பிச்சை எடுப்பவர்களை கண்காணித்தபடி நின்றனர்.
அப்போது ஒரு சிறுமியும், ஒரு சிறுவனும் மேளம் அடித்து பாட்டுப்பாடியபடி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர். மாறுவேட போலீசாரை பார்த்ததும் அவர்கள் இருவரும் மின்சார ரெயிலில் ஏறி தப்பி ஓடினார்கள்.

அதே ரெயிலில் பெண் போலீசார் விரட்டி சென்றனர். எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது ரெயிலை விட்டு இறங்கி பிச்சை எடுத்த சிறுவனும், சிறுமியும் தப்பி ஓட பார்த்தார்கள். அவர்கள் இருவரையும் பெண் போலீசார் மடக்கி பிடித்தனர். உடனே அவர்கள் இருவரும் கதறி அழுதனர்.
விசாரணையில் சிறுவனின் பெயர் அஜய் (வயது 5) என்றும், சிறுமியின் பெயர் சோனாபாய் (10) என்றும் தெரிய வந்தது. அவர்கள் மீஞ்சூரில் பெற்றோருடன் வசிப்பதாக தெரிவித்தனர்.

விசாரணையில் அவர்கள் திடுக்கிடும் தகவல் ஒன்றையும் கூறினார்கள். பெற்றோரே தங்களை படிக்க வைக்காமல் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறினார்கள். அவர்களது அப்பாவும், அம்மாவும், 2 சகோதரர்களும் பிச்சை எடுப்பதாக தெரிவித்தனர்.

பிச்சை கலாசாரத்தை ஒழிப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.மேலும் இது போன்றநிகழ்வுகளை கிரீம்ஸ்ரோடு,மன்னடி போன்ற வெளிநாட்டவர் வந்துபோகும் இடங்களில் இவர்கள் தரும் தொல்லைகள் ஏராளம்... கொஞ்சம் இந்தஏரியாவையும் விஸிட் பன்னுங்க.

0 comments: