தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.

சோப்பூரில் இருந்து 55 கி.மீ தொலவில் உள்ள பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று தீவிரவாதிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கினர்.

காவல்துறையினரும், ராணுவத்தினரும் அங்கு சென்ற போது அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதிலடித் தாக்குதல் நடத்தி வருவதாக பி.டி.ஐ. செய்தி தெரிவிக்கிறது.

தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

என்றாலும் இதுவரை தீவிரவாதிகள் தரப்பிலோ, பாதுகாப்புப் படையினரோ உயிரிழந்ததாக தகவல் ஏதும் இல்லை.

0 comments: