தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

தஞ்சை அப்டெக் கம்ப்யூட்டர் மையம் சார்பில் ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வேலை வாய்ப்பு முகாம் தஞ்சை பாரத் கல்லூரி வளாகத்தில் நாளை நடக்கிறது.தஞ்சை அப்டெக் கம்ப்யூட்டர் மையம், ஹெச்.சி.எல். கம்பெனியின் பி.பிஓ. நிறுவனம் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நாளை (16ம்தேதி) நடத்துகின்றன.

இந்த முகாமில் ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த முகாமில் பள்ளி மேற்படிப்பு முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம் என்று தஞ்சை அப்டெக் கம்ப்யூட்டர் மைய நிர்வாக இயக்குனர் இளமுருகன் தெரிவித்து உள்ளார்.

0 comments: