நரேந்திர மோடியின் தூண்டுதலின்படி செயல்படுகிறார் லலித் மோடி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில்தான் கொச்ச ஐபிஎல் அணிக்கு எதிராக லலித் மோடி செயல்படுவதாக கொச்சி அணி குற்றம் சாட்டியுள்ளது.

கொச்சி அணி நிர்வாகத்திற்கும், ஐபிஎல் நிர்வாகத்திற்கும் இடையே கடும் போர் மூண்டுள்ளது. இதில் பலருடைய தலைகளும் அடிபட்டு வருகின்றன. இந்த நிலையில் புதிய முகமாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் இந்த காட்சியில் இணைந்துள்ளார்.

கொச்சி அணியின் செய்தித் தொடர்பாளரான சத்யஜித் கெய்க்வாட் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அகமதாபாத் பெயரில் ஒரு அணியை வாங்க அடானி குருப்பூம், நரேந்திர மோடியும் கடுமையாக முயன்றனர்.

ஆனால் நாங்கள் ஏலத்தில் வென்றோம். இதையடுத்து முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவாரைத் தொடர்பு கொண்டு, எந்த நகரை தேர்வு செய்வது என்று கேட்டபோது, உங்களது விருப்படியான ஊரைத் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று அவர் கூறினார். அதன்படி நாங்கள் கொச்சியைத் தேர்வு செய்தோம்.

ஆனால் அகமதாபத்தை தளமாக கொண்ட அணியை உருவாக்க முடியாததால், அதிருப்தி அடைந்த நரேந்திர மோடி, தற்போது லலித் மோடி மூலம் எங்களுக்கு சிக்கலைக் கொடுத்து வருகிறார் என்றார் கெய்க்வாட்.

0 comments: