கொரடாச்சேரி தேர்தலில் பாதுகாப்பாக ஓட்டு போட ஏற்பாடு

கொரடாச்சேரி பேரூராட்சித் தேர்தலில் வாக்காளர்கள் பாதுகாப்பான முறையில் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள

செய்திக்குறிப்பு:கொரடாச்சேரியில் உள்ள 15 பேரூராட்சி வார்டுகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஆயிரத்து 942 ஆண் வாக்காளர்கள், ஆயிரத்து 915 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 857 பேர் ஓட்டு போட உள்ளனர். வார்டுக்கு 2 வேட்பாளர்கள் வீதம் 30 பேர் களத்தில் உள்ளனர். வரும் 19ம் தேதி காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.

வாக்காளர்கள் பாதுகாப்பான முறையில் ஓட்டு போட தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே வாக்காளர்கள் எந்தவித பயமும், பதட்டமும் இன்றி வாக்களிக்கலாம். வார்டு எண் 1 மற்றும் 2க்கு வடக்கு மாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், வார்டு 3 முதல் 12 முடிய கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வார்டு எண் 13, 14, 15க்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திரம் மூலம் நடக்க உள்ளது. மின்னணு இயந்திரத்தில் ஓட்டுப்பதிவு செய்யப்படும் முறை குறித்து இன்று (15ம் தேதி) பொதுமக்கள் கூடும் இடங்களில் மாதிரி செயல்முறை விளக்க முகாம் நடக்க உள்ளது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட், 31.12.2009 வரை பெற்றுள்ள ஓட்டுனர் உரிமம், வருமானவரி சான்று அடையாள அட்டை, மத்திய, மாநில அரசு, உள்ளாட்சி நிறுவனம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அடையாள அட்டை, 31.12.2009 வரை எடுக்கப்பட்ட புகைப்படம் எடுக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் மற்றும் தபால் நிலைய கிஷான் பாஸ் புத்தகம், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, முன்னாள் ராணுவ வீரருக்கான ஓய்வூதிய பாஸ்புக், ஓய்வூதிய உத்தரவு, முன்னாள் ராணுவத்தினரின் விதவை மனைவி மற்றும் சார்ந்தோர் சான்றுகள்.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய உத்தரவு மற்றும் விதவை ஓய்வூதிய உத்தரவு, ரயில்வே அடையாள அட்டை, சுதந்திரபோராட்ட தியாகிகளின் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஆயுத உரிமம், உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டை, சொத்து பத்திரம், பதிவு பத்திரம், தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டு போடலாம்.

0 comments: