இந்தோனேசிய தீவுகளை விலைபேசிய நித்யானந்தா

நித்யானந்தாவுக்கு தென்இந்தியாவில் உள்ள தியான பீட கிளைகள் மற்றும் சுமார் 40 நாடுகளில் உள்ள ஆசிரமங்களிலும் தினமும் பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த பணம் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த பணம் எங்குள்ளது என்று ஆய்வு நடக்கிறது.

தினமும் கோடிக்கணக்கில் பணம் கொட்டியதால் சிறிய தீவு ஒன்றை விலைக்கு வாங்க வேண்டும் என்று நித்யானந்தா ஆசைப்பட்டிருக்கிறார். அந்த தனி தீவில் தியான உலகத்தை உருவாக்க அவர் விரும்பினார். கடந்த 2008ம் ஆண்டு இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுளார் என்று தகவல்கள் வந்துள்ளன.


கனடா மற்றும் இந்தோனேசியா நாட்டு கடல் பகுதிக்கு அருகில் பல சிறிய தீவுகள் உள்ளன. அதில் அழகான ஒரு தீவு நித்யானந்தாவுக்காக பார்க்கப்பட்டுள்ளது.

நித்யானந்தாவின் சர்வதேச செயலாளர் சச்சிதானந்தா ஜெர்மனியில் உள்ள துருக்கி நாட்டு புரோக்கர் ஒருவர் மூலம் தீவை வாங்க பேச்சு வார்த்தை நடத்தினார். இதற்காக அமெரிக்க டாலரில் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த தீவு நித்யானந்தாவுக்கு கிடைக்கவில்லை என்றாலும் சில மாதங்களுக்கு முன்பு எப்படி யாவது தியான உலகத்தை படைக்க வேண்டும் என்ற லட்சியத்தில் மீண்டும் பெரிய தீவு ஒன்றை வாங்க நித்யானந்தாவின் சீடர்கள் பேச்சு நடத்தியுள்ளார்கள்.

0 comments: