சானியாவுக்கு சோயப்பின் 'மெஹர்' ரூ. 61 லட்சம்

சானியாவுக்கு சோயப் மாலிக், மெஹர் தொகையாக ரூ. 61 லட்சம் அளித்துள்ளார்.

கடந்த2002ம் ஆண்டு சோயப்புக்கும், ஆயிஷாவுக்கும் இடையிலான திருமணம் பதிவானது. அந்த நிக்கநாமாவில் சோயப் மாலிக் கையெழுத்திட்டுள்ளார். அதில், ஆயிஷாவுக்கு ரூ. 500 பாகிஸ்தான் பணத்தை மெஹராக தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், நேற்று சானியாவுடன் நடந்த திருமணத்தின்போது ரூ. 61 லட்சம் மெஹராக கொடுத்துள்ளார் சோயப்.

அதுதவிர ஒரு விலை உயர்ந்த காரையும் பரிசாக அளித்துள்ளாராம்.

திருமண நடவடிக்கைகளை முடித்து வைத்த காஜி நிஜாமுதீன் ஹுசேன் இதுகுறித்துக் கூறுகையில், ரூ. 61 லட்சம் மெஹரா தர முடிவானது என்றார்.

மெஹர் என்பது முஸ்லீம் சமுதாயத்தில், மணமகளுக்கு மணமகன் தர வேண்டியதாகும். அதை பணமாகவோ, தங்கமாகவோ அல்லது பிற விலை உயர்ந்த பொருட்களாகவோ கொடுப்பார்கள். அவரவர் வசதிப்படி இது அமையும்.

இந்த மெஹருக்கு முக்கிய காரணமே, எதிர்காலத்தில் மணமகனுக்கு மரணமோ அல்லது விவாகரத்தோ நடந்தால், அவரை மணக்கும் பெண்ணின் வாழ்க்கைப் பாதுகாப்புக்கு இது உதவும் என்பது தான்.

0 comments: