விபத்தில் சிக்கி தவித்த பெண்ணை தன் காரில் மருத்துவமனைக்கு அனுப்பிய வைகோ

பழநி அருகேயுள்ள சத்திரப்பட்டி தாசிரிப்பட்டியை சேர்ந்த ரங்கசாமி மனைவி பழனியம்மாள்(45), தாசிரிப்பட்டியில் இருந்து தனியார் பஸ்சில் பழநிக்கு சென்றுள்ளார். இவர் பஸ்சில் ஏறும் போது தவறி கீழே விழுந்தார்.


இந்த நேரத்தில் பழநியில் நேற்று விபத்தில் இறந்த, ம.தி.மு.க., தொண்டர் பிரபுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திண்டுக்கல்லுக்கு காரில் வைகோ திரும்பிக் கொண்டிருந்தார்.


பெண் விழுந்ததை பார்த்து காரை நிறுத்திய வைகோ, தனது காரிலேயே கீழே விழுந்த பழனியம்மாளை பழநி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துவிட்டு, மற்றொரு காரில் திண்டுக்கல் வந்தார்.


பழநி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற பழனியம்மாள், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

0 comments: