சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி








ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின்.


இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன் எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூஸ் 48 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும் 2 சிக்சரும் அடங்கும். பின்னர் களம் இறங்கிய சென்னை அணி 13.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 143 ரன் எடுத்தது.


இதையடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரெய்னா, முரளி விஜய் ஆகியோர் அபாரமாக விளையாடினர். ரெய்னா 39 பந்துகளில் 78 எடுத்தார். இதில் 11 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். முரளி விஜய் 40 பந்துகளில் 50 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும் 2 சிக்சரும் அடங்கும்.


0 comments: