அரசு ஊழியர்களுக்கு 1,500 குடியிருப்புகள்

அரசு ஊழியர்களுக்கு ரூ. 175 கோடி செலவில் 1,500 குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று முதல்வர் கருணாநிதி வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:

புதிய சட்டசபை கட்ட ஏதுவாக கலைவாணர் அரங்கத்தை அகற்ற வேண்டியதாயிற்று. கலைவாணர் அரங்கம் பல்வேறு வகையில் பயன்பட்டது. மீண்டும் அனைவருக்கும் பயன்படும் வகையில் கலைவாணர் அரங்கம் நவீன கூட்டரங்கமாக கட்டப்படும். அதில் சுமார் 1,500 பேர் அமரலாம்.

இந்த புதிய கலைவாணர் அரங்கம் ரூ. 50 கோடி செலவில் கட்டப்படும்.

தாடண்டர் நகரில் அரசு ஊழியர்களுக்கு ரூ. 175 கோடி செலவில் 1,500 குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

0 comments: